Monday, May 3, 2010

காரிய காரணம் கடந்தவன்

தமிழில் எல்லா வார்த்தைகளுமே கூடுமான வரை காரண பெயராகத்தான் உள்ளது.
மற்றும் இடு குறி பெயர்களாக உள்ளது.
காரணம் தமிழ் ஆக்கிய சித்தர்கள்
காரண காரியம் ஆராய்ந்தே பெயர்களை சூட்டி இருக்கிறார்கள்.

அதுவும் இறைவனை காரிய காரணம் கடந்தவன் என்பதை காட்ட
இரண்டு கண்கள் காரியப்பட்டால் மனம் காரணப் படும்.
இந்த இரண்டையும் கடந்தால் மூன்றாவதான ஆன்மா காரியப்படும்.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் மூன்றாவதாக காரண காரியம் கடந்த ஆன்மாவை குறிக்கும் விதத்தில் அமைத்தார்கள்.

1 நமது ஆன்மா உயிரும் மெய்யான உடலும் இயங்கு நிலையிலும் எந்த இயக்கத்தையும் சாராமல் தனித்து இருக்கும்.

2 எனினும் மெய் என்னும் உடலினுள்ளே இருப்பதால் ஆன்மாவையும் மெய் என கொள்ள வேண்டும்.

3 ஆன்மா மெய் எனும் உடலோடு சேர்ந்து இருந்தாலும் இறைவனோடு கலக்கின்ற புணர்ச்சியின் பொது தன்னை அறியும்.

என்று பொருள் படும்.

மேலும் இந்த ஆன்மாவை அறிய உதவும் ஆயுதம் எது ?
அது பாதம்
இறைவனின் பாதத்தை பிடிக்க சொன்னது எதற்காக ?
பாதம் என்றால் கால்
கால் என்றால் காற்று
நாம் விடுகின்ற மூச்சே கால் எனப்படும்.
இதைதான் காற்றை பிடிக்கும் கணக்கரிவாளர் கூற்றை உதைப்பார்
என்று சொன்னார்கள்.
நாம் விடுகின்ற மூச்சுக்கும் நமது ஆயுளுக்கும் தொடர்பு உள்ளது என்று சித்தர்கள் வகுத்து இருக்கிறார்கள்..
உள்ளே போகின்ற சுவாசம் மேலே அண்டத்தில் சேர்ந்தால்
ஞான நிலை வாய்க்கும்.
ஆகவே ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்தால்
அனைத்தும் இறை நிலையை தெரிவிக்கும் என்பதனை உணரலாம்.

அன்புடன்
சிவம்

கேள்வி - பதில் -4 & 5

4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா?

இன்றைக்கும் அவரது கைப்பிரதி தரும சாலையில் உள்ளது.
இந்த தரும சாலை என்பது வடலூர் ஞான சபை அருகில் உள்ளது.
ஆகவே யாரும் இடை செருகல் செய்ய முடியாது.
மேலும் அவர் இதற்கு அடுத்த நிலையினையும் எழுதியதாகவும்.
பக்குவப்பட்டவர்கள் இல்லாத காரணத்தால் அவை வெளிப்பட வில்லை என்றும் தெரிகிறது.


5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு. வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா?

இந்த நிகழ்ச்சி கடலூரில் நடந்தது. இது அவரது ஆரம்ப காலத்தில் நடந்தது அல்ல.
முதலில் பிரம்ம சமாஜத்தின் கொள்கை என்ன என்றால்
நான் பிரம்மம் என்னை தவிர வேறு இல்லை என்பதுதான்.
ஆனால் இந்த நிலையினை அடைவதற்கு வழி என்ன.

வெறும் வாயால் நான் பிரம்மம் என்று சொன்னால் அந்த நிலையினை அடைந்ததாக ஆகி விடுமா ?

இந்த விவாதத்தில் வள்ளல் பெருமானை ஏற்றி விட்டவர்கள் ஒரு சில தீட்சிதர்கள். அவர்களுக்கு ஆதரவாகவே உருவ வழிபாட்டை பற்றி வள்ளல் பெருமான் கூறினார்கள்.
அதாவது நான் பிரம்மம் என்ற நிலை வர வேண்டும் என்றால் நான் என்கின்ற நிலை போய் நிஷ்கலமாக மாற வேண்டும்.

இந்த நிஷ்கல நிலை என்பது வாயால் சொல்வது அல்ல. இது அனுபவம்.
(ஒரு சிலர் ரமண மகரிஷியின் அனுபவத்தை படித்து விட்டு உலகியலில் அனைத்து காரியத்தையும் செய்து கொண்டு அந்த நிலையினை அடைந்து விட்டதை போன்று பேசுவது போல் அல்ல).

நான் பிரம்மம் என்னும் இந்த அனுபவம் வாய்க்க வேண்டும் என்றால்
உருவம் கரைந்து அருவமாக மாற வேண்டும்.
இங்கே நான் என்கின்ற உணர்வு அற்றால் தான் இந்த நிலை வாய்க்கும்.
இங்கே நான் பிரம்ம்மம் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சளவில்தான்.
எப்படி என்றால்
நான் பிரம்மம் என்று சொல்லக் கூடிய உணர்வு மீதம் இருப்பதனால்
இங்கே ஜீவ ஐக்கியம் என்பது ஏற்படவில்லை
ஜீவ ஐக்கியம் ஏறபடவில்லை என்றால் அது ஜீவன் வேறாகவும்
இறைவன் வேறாகவும் காண்கின்ற நிலை உள்ளது.
இறைவனை வேறாக காண்கின்ற நிலை இருக்கும் வரை நான் பிரம்மம் என்று சொல்வது வெறும் பேச்சளவாக தான் இருக்கும்.
ஆகவேதான் இந்த அனுபவம் வாய்க்க வேண்டும் என்றால்
முதலில் உருவ வழிபாட்டை உணர்ந்து அது கரைந்து அருவ நிலையினை அடைய வேண்டும் என்று வாதிட்டார்கள்.
இந்த வாதத்திற்கு எதிர் வாதம் செய்ய முடியாத ஸ்ரீதர நாயக்கர்
விவாதத்தை விட்டு வெளியேறினார்.
வள்ளல் பெருமான் பிரம்ம சமாஜ கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார் என்பதை விட பிரம்மத்தை எப்படி உணரலாம் என்று கருத்தை தெரிவித்தார் என்பதே உண்மை. அதற்கான படியாக உருவ வழிபாடு இருக்கும் என்றே கூறினார். அதற்காக உருவ வழ்பாட்டின் மூலம் இறை நிலையை அடைய முடியும் என்று கூற வில்லை.

கேள்வி - பதில் -3

3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?
அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே!

சைவ சமயத்தின் உச்சமே உருவத்தை விட்டு விலகி அருவத்தில் கரைவதுதான். இதை நீங்கள் நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக திருவாசகத்தில் உருவம் கரிந்து அருவ நிலை சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது.

இது புரிய வேண்டும் என்றால்
மார்க்கங்கள் நான்கும் புரிய வேண்டும்.
நான்கு மார்க்கங்கள் ஆவன
சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம்
ஆக நான்கு உள்ளன.

சற்புத்திர மார்க்கம் என்றால் இறைவனை தந்தையாகவும்
நம்மை அவரது பிள்ளையாகவும் பாவித்து இறைவனை தொழுவது.
இது ஒரு விதத்தில் ஏசு பெருமான் திரு ஞான சம்பந்தர், அப்பர் போன்றவர்கள்
தொழுத முறை.

தாச மார்க்கம் என்பது இறைவனை ஆசிரியராகவும் நம்மை
அவரது சீடனாகவும் பாவித்து இறைவனிடம் கேள்வி கேட்டு பதிலை பெருகின்றதும் அதன் மூலம் ஞானத்தை அடைய முயற்சிப்பதும் ஆகும்.
மாணிக்க வாசக பெருமான் இந்த முறையிலேயே இறைவனை கண்டார்.

சக மார்க்கம் என்பது இறைவனை நமது தோழனாக காண்பது.
இறைவனிடம் அதிக உரிமை எடுத்துகொண்டு இறை அறிவை பெறுவது.
இதை ஓரளவு மகா பாரதத்தில் அர்ஜுனன் கண்ணனிடம் கொண்ட நட்பை போல என்று சொல்லலாம்.

அடுத்து சன்மார்க்கம் என்பது இறைவனை தானாக காண்பது.
இங்குதான் ஒருமை என்பது தோன்றுகிறது.
இங்கு ஒன்றை தவிர வேறு இல்லை என்று உணர்படுகிறது.
இதற்கு தான் ஜீவ ஐக்கியம் என்று பெயர்.

சன்மார்க்கம் தவிர்த்த மூன்றும் இறைவனை வேறாக காண்பதனால் இதை துவைதம் என்று அழைக்கலாம்.
சன்மார்க்கம் ஒன்றில் மட்டுமே இறைவனும் தானும் ஒன்றாகும் தன்மை ஏற்படுவதனால் இதை அத்வைதம் என்று அழைக்கலாம்.

அடுத்து வள்ளல் பெருமானார் அனைத்து உயிர்களையும் தானாக காணும் பக்குவம் பெற்ற காரணத்தால் இந்த அருட்பா, மருட்பா விவகாரத்தை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால் ஒருமை பெற்ற ஒருவருக்கு
எதிர்ப்பவரும், எதிர்க்கப் பட்ட நபரும் ஒன்றாகவே தெரியும்.
இங்கே எதிர்ப்பவர் யார் ? எதிர்க்கப் படும் நபர் யார் ?
அனைத்தும் ஒன்று தானே ?

இங்கே அருட்பா, மருத்பாவை பற்றி எழுத வேண்டும் என்றால் அது மிக பெரிய கட்டுரையாக மாறி விடும். ஆகவே சுருக்கமாக கூறுகிறேன்.
சைவ சமயத்தின் மீதும் சைவ சித்தாந்தங்களின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இலங்கையை சேர்ந்த கொழும்பு ஆறுமுக நாவலர்.
இவர் மிகுந்த சைவ மத பற்றாளர். ( இவர்தான் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார்). இவர் சைவ சமத்திற்கு தொண்டு செய்ய வேண்டும் என்று சிதம்பரத்தில் தங்கி பல நூல்களை எழுதி வந்தார்.
இந்த கால கட்டத்தில் வள்ளலார் எழுதிய திரு அருட்பா பாடல்கள் சைவ சமயம் சார்ந்தவர்களால் ஏற்றுகொள்ளபட்டு பாடல்களாக பாடப்பட்டு வந்தன.
சைவ திரு முறைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆறுமுக நாவலரிடம்
வள்ளலாரை பற்றி தவறான கருத்துக்களை கூறி அவரை வள்ளலாருக்கு எதிராக ஒரு சிலர் தூண்டி விட்டனர். உண்மையை உணராத ஆறுமுக நாவலர் ஒரு சிலரின் தூண்டுதலால் வழக்காடு மன்றம் வரை சென்று பின்னர் தோற்று
அவரின் புகழை இழந்தார்.

ஆக வள்ளல் பெருமானும் முதல் மூன்று மார்க்கங்களான
சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம்
என மூன்று நிலைகளில் இருக்கும் வரை முருகன், சிவன் என வழிபாடு முறையினை வைத்திருந்தார்.

அடுத்த நிலையான சன்மார்க்கம் நிலை வரும்போது அனைத்தையும் விட்டு விலகி ஜோதி நிலையினை உணர்ந்த காரனத்தால் இறைவன் உருவம் அற்றவன் என்று ஜோதி வடிவானவன் என்று அனைவருக்கும் எடுத்து கூறினார்.
இது அவரது ஆறாம் திருமுறை பாடல்கள் அனைத்திலும் ஜோதி வழிபாடே
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் நிலையினை விளக்கி உள்ளார். (முதல் ஐந்து திருமுறையிலும் உருவ வழிபாடே உள்ளது)

அவர் உயர்ந்த அருளாளர் என்பதனால் அவரது கருத்துக்கள் என்ன என்பது அவர் கைப்பட எழுதிய பாடல்களில் உள்ளதனால் வேறு யாரும் அவர் கருத்தினை மாற்ற முடியாது. அவரது கைப்படவே வாழ்வியல் முதல் ஞான நிலை வரை அனைத்து நிலைகளையும் எழுதி வைத்துள்ளார்.

கேள்வி - பதில் -2

2)முதல் ஐந்து திருமுறைகள் சைவ சித்தாந்த ரீதியாகப் பாடிய வள்ளலார் ஏன் ஆறாம் திருமுறையை மட்டும் நேர் எதிர்கருத்துடன் பாடவேண்டும்?

துவைதம் கரைந்தால் அத்வைதம். இங்கே அ + துவைதம் = அத்வைதம் எனப்படும்.
துவைதம் கடவுளை நம்மை விட்டு வெளியில் காண்பது.
அத்வைதம் என்பது கடவுளை நம்முள்ளே நாமாக காண்பது.
வள்ளல் பெருமான்
தியானிக்கும் போது நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.
எதாவது பொருளை வைத்து தியானிக்கும் போது
உருவம் கரைந்து அருவமாக மாறும்.
இது எல்லா ஞானிகளுக்கும் ஏற்பட்ட அனுபவம்.
இந்த அருவ நிலை வாய்க்கும் வரை உருவ வழிபாடு தேவைபடுகிறது.
உருவ நிலை மாறி அருவ நிலை வாய்க்க இது 12 ஆண்டுகள்.
கூடுமானவரை இந்த கால கட்டம் எல்லா ஞானிகளுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
வள்ளல் பெருமானும் அருவ நிலை வைத்த உடன் உருவ வழிபாட்டிற்கு
முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.
இருப்பினும் நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்பதனால்
விளக்கினை வைத்து அதன் தீபத்தை உற்று நோக்கி
நமது புருவ மத்தியத்தில் ஜோதி ஒளிர்வதாக பழக்கப் படுத்த சொன்னார்கள்.
காரணம்
உருவம் கரைந்து அருவம் வாய்க்கும் போது ஜோதி தரிசனமே வாய்க்கும்.
ஆக உருவம் கரைவதற்கான காலம் குறைவாகும்.
இந்த ஜோதி தரிசனம் அனைத்து ஞானிகளுக்கும் பொதுவான அனுபவமாகத்தான் இருக்கிறது.

கேள்வி - பதில் -1

1)வள்ளலாரின் பெருமை ஜீவகாருண்யத்தை மிகச்சிறந்த ஆன்மிக நெறியாக வலியுறுத்தியதில் இருக்கிறது.

ஜீவகாருண்யம் என்பது இறைவனை அடைவதற்கான பாதையாக இறை நிலை அனுபவம் வாய்த்த அனைத்து ஞானிகளுமே கூறி இருக்கிறார்கள். திருவள்ளுவர் கூட கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற தலைப்புகளில் ஜீவ காருண்யத்தை வலியுறுத்தி உள்ளார்.
சரி ஜீவ காருன்யதிற்கும் இறை நிலையை அடைவதற்கும் என்ன தொடர்பு ?
ஜீவ காருண்யம் என்பதே பிற உயிர்களுக்கு எந்த துன்பமும் செய்யாமல் இருப்பதுதான்.
ஏன் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது என்றால்
பிற உயிர்களுக்கு செய்யும் துன்பம் நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பமாகும் என்கின்ற நீதி நெறியின் அடிப்படையிலாகும்.
இது எப்படி என்றால்
இறை அனுபவம் என்பதே எல்லா உயிர்களையும் தானாக காண்பதும்.
அடுத்து தன்னை தவிர வேறு ஒன்று இல்லை என்கின்ற நிலையினை அடைவதுதான்.
இப்படி பட்ட அனுபவம் வைத்தவர்கள் மட்டுமே இறை நிலையை அடைய முடியும்.
ஆகவேதான் பிற உயிர்கள் படுகின்ற துன்பம் அனைத்தும் தான் படுவதாக ஏற்படும் அனுபவம் இறை நிலையினை அடைவதற்கு முன்னர் ஏற்படும் அனுபவமாகும்.
மேலும் இந்த உயிர்கள் அனைத்தும் வினையின் காரணமாக அது நல் வினை, தீ வினை பிறப்பெடுத்து இருக்கின்றன. ஆனால் ஆதியில் இவை அனைத்தும் ஒன்றிலிருந்து பிரிந்து உடல் எடுத்து இருக்கின்றன.
ஆக நாம் அனைவரும் ஒன்றான சிவத்திலிருந்து (இங்கு சிவம் என்பது சிவன் அல்ல)
பிரிந்து வந்து இந்த உடலை வினையின் காரணமாக எடுத்து இருக்கிறோம்.
சரி வினை எப்படி தோற்றியது என்றால்
முதலில் சிவம் என்பது இயக்கமற்ற (Static) நிலையில் இருந்தது.
இயக்கமற்ற நிலையில் இருந்து சலனம் தோன்றியது.
அதுவே இயக்கமாக (Dynamic) மாறியது.
அந்த இயக்கத்தின் காரணமாக சுத்த மாயை தோன்றியது
அடுத்து அசுத்த மாயை தோன்றியது.
அதன் காரணமாய் பிறப்பு தோன்றியது.
பிறப்பின் காரணமாய் வினை தோன்றியது.
அது நல் வினை என்றும் தீ வினை என்றும்
மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாய் ஆனது.
இங்கே பிறப்பறுக்க வேண்டும் என்றால்
நாம் நல் வினை மற்றும் தீ வினையில் இருந்து விடு பட வேண்டும்.
அதற்கு பெயர்தான் நிர்மல நிலை அதாவது அசுத்த மாயையில் இருந்து
சுத்த மாயை நிலைக்கு உயர்தல்.
அந்த நிலையினை அடைய நமக்கு துணை செய்வதுதான்
ஜீவகாருண்யம்.

Sunday, April 11, 2010

அடுப்புக் கூட்டு எழுத்து

அன்பு நண்பர்களே,

ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு
எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும்
பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல்
உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும்
நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து"
எனவும் பெயர் பெறும்.
அடுப்பு கூடு எழுத்து என்று சொன்னதற்கு காரணம் உண்டு
இது தெரிய வேண்டும் என்றால்
நாம் அவ்வையாரின் அகவலை நோக்க வேண்டும்.
அது
மூலாதாரத்து மூண்டு எழு கனலை
காலால் எழுப்பும் கருத்து அறிவித்து
என்கின்ற வரிகளின் பொருள் உணர்ந்தால்
அடுப்பு கூட்டு எழுத்து என்று ஏன் பெயர் வந்தது என்பதனை உணரலாம்.
இங்கே மூலாதாரம் என்றால் பதஞ்சலியின் யோக சூத்திரத்தை வைத்து பார்க்கும் போது
மூலாதாரம் என்பது நமது மல வாயிலுக்கு அருகில் இருப்பதாக கருதப்பட்டு வருகிறது.
ஆனால் சித்தர்கள் மூலாதாரம் என்பது புருவ மதியத்தில் உள்ளதாக
எடுத்துரைக்கிறார்கள்.
அதாவது மூன்றாவது கண் எனப்படுகின்ற நமது ஆன்மாவே
மூலாதாரம் எனப்படுகிறது.
அது கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குகிறது.
இருப்பினும் அது அசுத்த மாயை என்னும் திரை மறைப்பில் உள்ளதால்
அது அக்னி என்னும் கனலாக உள்ளது
கனல் என்பது நெருப்பு அது ஜோதியாக மாற வேண்டும் என்றால்
இங்குதான் அடுப்பு கூட்டு எழுத்து என்ற பெயர் ஏன் வந்தது என்று உணரலாம்.
அடுப்பில் உள்ள கனலை கொழுந்து விட்டு எரிய செய்ய வேண்டும் என்றால் எனா
செய்வோம். ஊது குழ கொண்டு காற்றால் ஊதுவோம்.
மூலாதாரம் எனப்படும் நமது ஆன்மா மூண்டு எழு கனலாக கனன்று கொண்டு இருக்கிறது அதை
தீபமாக மாற்ற நாம் நமது மூச்சு காற்றை மேலே ஊதுவதன் மூலம் ஏற்றுகின்ற ரகசியம்
அறிந்தால் இறை தரிசனம் வாய்க்கும். இதைதான் சித்தர்கள் சாகா கல்வி என்று மறை
பொருளாக ரகசியமாக வைத்து இருந்தார்கள்.
இந்த ரகசியத்தின் வடிவாகதான் அடுப்பு கூட்டு எழுத்து என்று ஆயுத எழுத்தினை
படைத்தார்கள்.
தமிழில் எல்லா வார்த்தைகளுமே கூடுமான வரை காரண பெயராகத்தான் உள்ளது.
மற்றும் இடு குறி பெயர்களாக உள்ளது.
காரணம் தமிழ் ஆக்கிய சித்தர்கள்
காரண காரியம் ஆராய்ந்தே பெயர்களை சூட்டி இருக்கிறார்கள்.
அதுவும் இறைவனை காரிய காரணம் கடந்தவன் என்பதை காட்ட
இரண்டு கண்கள் காரியப்பட்டால் மனம் காரணப் படும்.
இந்த இரண்டையும் கடந்தால் மூன்றாவதான ஆன்மா காரியப்படும்.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் மூன்றாவதாக காரண காரியம் கடந்த ஆன்மாவை குறிக்கும்
விதத்தில் அமைத்தார்கள்.
மேலோட்டமாக பார்த்தால் சித்தர்களின் பாதை புரியாது.
மூலாதாரம் என்பது மலக்குடளுக்கு அருகில் இல்லை என்பதை
சுப்பிரமணியர் ஞானத்தில் மிக தெளிவாக எழுதி உள்ளார்.

அன்புடன்
சிவம்

ஆய்த எழுத்து

அன்புள்ள நண்பர்களுக்கு,

தமிழ் மொழி எங்கு ஆரம்பித்தாலும் முடிவில் இறை நிலையை அடையும் வழியை
கான்பித்தலையே முடிவாக கொள்ளும்.
அது போல் தான்
தமிழ் எழுத்துக்களை வடிவமைத்த சித்தர்கள்
தமிழில்
உயிர், மெய், ஆயுதம் என்று மூன்றாக பிரித்தார்கள்.
நம்முடைய உயிர் எப்படி தனியாக இயங்காதோ,
நம்முடைய மெய் அதாவது உடல் எப்படி தனியாக இயங்காதோ
அதேபோல் ஆயுதமும் தனித்து இயங்காது.
உயிருடன் உடலான மெய் சேரும்போதுதான் இயக்கம் தோன்றுகிறது. அதே போல்தான் தமிழில்
உயிர் எழுத்துக்களுடன் மெய் எழுத்துக்கள் சேரும் பொது இயக்க நிலையினை அடைகிறது.
சரி ஆயுதம் என்று ஒரு தனி எழுத்து எதற்க்காக படைத்தார்கள்.
உயிரும் மெய்யும் சேர்ந்தால் உலகியல் இயக்கம்
அடுத்து இறை நிலை அடைவதற்கான பாதையை
ஆயுத எழுத்தில் வைத்தார்கள்.
ஃ மூன்று புள்ளிகளாக நமக்கு காட்சி கொடுக்கும் இந்த ஆயுத எழுத்து
ஞான நிலையினையும் இறைவனை அடையும் வழியினையும் நமக்கு வழி காட்டுவதற்காக
ஏற்படுத்தப் பட்டது.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் ஒரு புள்ளி என்பது
இரண்டு புள்ளிகள் என்பது இரண்டு கண்களையும்
மூன்றாவதாக மேலே உள்ள புள்ளி நமது மூன்றாவது கண்
எனப்படுகின்ற நமது ஆன்மாவையும் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது நமது புருவ மத்தியம் என சொல்லப் படுகின்ற
உச்சிக்கு கீழே உண்ணாவுக்கு மேலே
நமது ஆன்மா நிலை கொண்டு உள்ளது அந்த ஆன்மாவினுள்ளே
இறைவன் குடி கொண்டுள்ளான் அதை தக்க ஆயுதம் கொண்டு
அறிந்து அம்மையம் ஆக வேண்டும் என்றுதான்
நடைமுறைக்கு பயன்படாத ஒரு ஒரு எழுத்தை படைத்தார்கள்.
அதே போல் தமிழில் உயிர் எழுத்துக்கு
அடிப்படை எழுத்துக்கள் அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்து மட்டுமே
இவை நம்மை இயக்கும் பஞ்ச பூதங்களை குறிக்கின்றது.
தமிழ் எழுத்தின் ஆதி மூலம் ஞானத்தின் பாதையை நமக்கு தெரிவிப்பதற்காக
அமைக்கப்பட்டது.
எழுத்து முதல் வார்த்தைகள் வரை தமிழ் மொழி சித்தர்களால் வளர்க்கப் பட்டது.
அப்படிப்பட்ட முன்னோடிகளான சித்தர்களின் இலக்கியங்கள் இருட்டடிப்பு
செய்யப்படுவது வேதனையான விஷயம்.
அன்புடன்
நக்கினம் சிவம்

சுற்றுலா வந்தவர்கள் நாம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

மனதின் தன்மை அது எந்த பொருளை காண்கிறதோ
அந்த பொருளை தன் வசம் ஆக்க முயற்சிக்கும்.
அடுத்து அந்த பொருளை தன் அடிமையாக ஆக்கி விடும்.
அப்படிப்பட்ட மனம் நம்மோடே இருக்கும் போது
நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உலகில் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால்
மனம் போன போக்கினிலே போக வேண்டாம்
என்ற வாக்கிற்கேற்ப
மனதை நம் அறிவின் துணை கொண்டு அடக்கி
வாழ் நாளை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

மனமானது
ஆசை காட்டி அதன் வழி போக வைக்கும்
பயமுறுத்தி அதன் வழி நடக்க வைக்கும்.
பற்றுகளை வைத்து அதன் வழி செலுத்த வைக்கும்
பாசங்களை வைத்து அதன் வழி கேட்க வைக்கும்

அப்படிப்பட்ட மனதை
நாம் பேராசை படுவதிலிருந்து விடுபட்டால்
அச்சபடுவதிலிருந்து விலகி இருந்தால்
எத்தன மீதும் அதிக பற்று வைக்காமல் இருந்தால்
எவர் மீதும் பாசம் வைக்காமல்
அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால்
மனமானது நம் அறிவின் வழி நடந்து
நமது அடிமையாக பணி புரியும்.

நாம் ஆசைப் படுவதிலிருந்தும், அச்சப்படுவதில் இருந்தும்,
பற்று வைப்பதிலிருந்தும், பாசம் வைப்பதிலிருந்தும்
விடுபடுவதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது

அது
நாம் அனைவரும் இந்த பூமிக்கு சுற்றுலா பயணியாக
வருகை புரிந்து இருக்கிறோம் என்ற எண்ணத்துடன்
வாழ்ந்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
நாம் ஊட்டிக்கோ, காஷ்மிருக்கோ அல்லது ஆஸ்திரேலியா விற்கோ
சுற்றுலா செல்வதாக வைத்துகொண்டால்
நமக்கு எவ்வளவு குறைவான பொருட்கள் தேவையோ
அந்த அளவுக்குத்தான் பொருட்களை எடுத்து செல்வோம்.
அதே போல் நாம் வாழ்வதற்கு எவ்வளவு குறைந்த
பொருட்கள் தேவையோ அந்த அளவு பொருட்களை மட்டும்
நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் சுற்றுலா சென்ற இடத்தில் நமக்கு தேவை இல்லாத பொருட்களை
நாம் என்ன செய்வோம் அங்கே வேறு யாருக்காவது கொடுத்து விடுவோம். காரணம் அது
நமக்கு சுமையாக ஆகி விடும் என்பதனால்தான்.

அடுத்து நம்மோடு சுற்றுலா வந்தவர்கள் மீது அன்பு செலுத்துவோம் ஆனால் அவர்கள்
மீது பாசம் வைக்க மாட்டோம்.
ஏனென்றால் அவர்கள் நம்மோடு வர மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும். அதே போல்
தான் நம்மோடு பிறந்தவர்கள், நமக்கு பிறந்தவர்கள், நம்மோடு வாழ்பவர்கள், நக்கு
துணையாக இருப்பவர்கள்
அனைவருமே நம்மோடு சுற்றுலா வந்தவர்கள்.
அவர்களிடம் அன்பு வைக்கலாம் ஆனால் பாசம் வைக்க கூடாது.

நாம் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதாக இருந்தால்
அந்த பனியின் குளிரை தாங்கும் அளவிற்கு கம்பளி உடை
அணிந்து செல்வோம். காரணம் அந்த பிரதேசத்தில்
இருப்பதற்கு அந்த உடை இருந்தால் தான் குளிர் நம்மை தாக்காது.
அது போல் இந்த பூமியை சுற்றி பார்ப்பதற்கு
நாம் மனிதன் என்ற உடை உடுத்தி வந்து இருக்கிறோம்.
ஆக நமது உடை இந்த பூமிக்கான உடை.

மீண்டும் நாம் வந்த இடமான சிவ பிரதேசத்திற்கு
செல்லும் போது இந்த அசுத்த உடையை விட்டு விட்டு
அல்லது இந்த உடையை சுத்தப்படுத்திக் கொண்டு
நமது சொந்த இடத்திற்கு திரும்ப போகிறோம்.

அப்படி இருக்கும்போது
நமது உடல் நமக்கு சொந்தம் இல்லை
நாம் வசிக்கும் நமது வீடு நமக்கு சொந்தம் இல்லை
நமது உறவினர்கள் நண்பர்கள் நமக்கு சொந்தம் இல்லை
நம்மிடம் உள்ள பொருட்கள் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை.
நாம் பெற்ற பதவி புகழ், பணம் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாததனால்
நாம் எதன் மீதும் பற்றோ, பாசமோ, ஆசையோ வைக்காமல்
எதற்கும், எவருக்கும் பயப்படாமல்
மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

சிதம்பர ரகசியம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

சிதம்பர ரகசியம் என்பது நடராஜரின் உருவத்திலேயே உள்ளது.
நாம் நடராஜரின் சிலையை உற்று நோக்கினால்
நடராஜரை சுற்றி ஜோதி வடிவம் உள்ளது.
நடராஜர் வலது காலை தூக்கி ஆடுகிறார்.
நடராஜரை சுற்றி உள்ள அக்னிதான் நமது ஆன்மா
அந்த ஆன்மா சிற்சபையில் உள்ளது.
சிற்சபை என்பது நமது புருவ மத்தியம்
அந்த ஆன்மா என்னும் அக்கினியின் உள்ளே
சிவமான இறைவன் நடம் இட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த நடத்தை தற்போதம் அற்று அதாவது
நான் என்கின்ற உணர்வு கடந்து
தரிசனம் காண்பதே ஜோதி தரிசனம் ஆகும்.
அதைதான் நமது வள்ளல் பெருமான்
ஜோதி உள் ஜோதி என்று கூறி இருக்கிறார்கள்.

ஜோதி தரிசனத்தின் போது நான் என்கின்ற உணர்வு போய் விடுவதனால்
அங்கே ஆணவம் கன்மம் மாயை மூன்று விலகி இருக்கும்.
துரியமும் கடந்த சுகம் பூரணம் என்னும் நிலையினை
சுகாதீதம் என்னும் நிலையினை அடைந்து இருப்போம்.
இதைதான் கடவுள் நிலை அறிந்து அம்மையம் ஆதல்
என்று சித்தர் பெருமக்களும், நமது வள்ளல் பெருமானாரும்
மறை பொருளாக பாடல்களாக பாடி உள்ளார்கள்.
இங்கே இறை தரிசனம் என்பது
நமது ஆன்மாவின் உள்ளே குடி கொண்டுள்ள
சிவமான ஜோதி தரிசனம் பெறுவதுதான்.
தூலமான பொருளை காண தூலமான கண்கள் பயன்படும்
சூக்குமமாய் உள்ள சிவத்தை நாம் ஆன்மாவினால் காண்பதனால் தான்
இது ஆன்ம தரிசனம் என்றும் பெயர் பெறுகிறது.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

அருட்பெருஞ்ஜோதி - விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நமது வள்ளல் பெருமான் அருளிய மகா மந்திரமான

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "*

என்பதற்கு விளக்கம் இறை தரிசனத்தின் போது ஏற்படுகின்ற அனுபவம் ஆகும்.
நமது வள்ளல் பெருமான் ஒரு ஜாமம் இக விசரமின்றி ஒருமையுடன்
இறை உணர்வுடன் இருந்தால் இறை அருள் கிடைக்கும் என்று கூறி
இருக்கிறார்கள். அதற்கான காரணம் மேற்கண்ட அருள் அனுபவம் வாய்க்கும்
என்பதுதான்.

அப்போது தான் என்கின்ற தற்போதம் போய்
அருள் தரிசனம் என்கின்ற அருளே வடிவாக நாம் மாறி இருப்போம்.
அதன் காரணமாக நம்மை பற்றிய ராக துவேஷங்களான
திரைகள் விலகி அடுத்து ஜோதி தரிசனம் வாய்க்கும்.
ஜோதி தரிசனத்தின் போது நாம் ஒருமை நிலையுடன் கூடிய கருணை வடிவமாக அதாவது இறை
நிலையை அடைந்து இருப்போம்.

அந்த அனுபவம் தான் நமது வள்ளல் பெருமானாரால்

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "

என்று அருளப்பட்டது.

இறை தரிசனத்திற்கு முன்பு தற்போதம் போய்
அருள் பெருகி ஜோதி தரிசனம் வாய்க்கும்
அப்போது தனி பெரும் கருணை என்றால்
ஒருமையுடன் கூடிய தயா வடிவம்
ஜீவகாருண்யமே வடிவமாக
அன்பே வடிவாக நம் நிலை மாறும்.
அருள் அனுபவமே மகா மந்திரமாக
நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

Mukthi and Siddhi

What is meant by Mukthi and Siddhi ? How can we attain Mukthi and Siddhi ?

Mukthi enbathu munnurum saathanam
Sitthi enbathu nilai serntha Anubavam

There are two levels to attain God's Grace and Mingle withShivam that is God.
One stage is Mukthi and the another stage is Sitthi
What is the difference between Mukthi and Sitthi ?
First we understand what is Mukthi and Sitthi.

Mukthi :
Most of the Gnanis are mingled with the Shivam. That is their Athma and Jeevan mingled with God but the body doesn't mingle with Shivam.
They get Samaathi stage.
What is Samaathi Stage ?
Samaathi is nothing but your mind mingle in your Jeevan.
Your outer concious get back to innner concious.
After that your inner concious is also lost.
In this stage you are not there why because
You lost your inner concious and outer concious.
You are not able to know what is happening in this stage.
That concious of I is lost.
At this stage you mingled with Param that is Shivam that is God.
But You are not able to experience the Mingle with God.
Why because you are mingled with God.
There is no YOU.

Sitthi :
Sitthi is nothing but same as Mukthi but some difference is there.
In Sitthi Your mind mingled with Jeevan and Jeevan Mingled with Athma
But the Athma is in Concious and know the
Level and Mingled with Shivam.
Before Sitthi our material body is changed and get power
to mingle with God.
The Material body changed in to Sukshuma body.
The sukshuma body having only Athma concious
not with mind's inner concious and outer concious.
In Sitthi your athma gets the experience of
Mingled with God.
Your Athma return back after Mingled with God.
After that you know all the truth of the Universe.
There is no abstacles to your body and Athma.

All these two stages are attained only with God's Grace
Your Older experience (Mur Piravi) in study this subject.
Totally destroyed Mind's Level.
In Mukthi and Sitthi if your mind is working in inner concious or
outer concious level means you are not enter even in to the first stage.
Mind is the main abstacle to know the God.
Mindless Athma is only able to know the God and mingled with God.

It is not easy to explain all the stages in Mukthi and Sitthi.
why because there is no words to explain all the stages.

I try to explain my best level.

Thanking you
yours
Brotherly Athman
Nakinam Sivam

How to feel or experience chit pranan

How to feel or experience chit pranan

What is Chit Pranan ?
Chit Pranan is called as Jeevan.
It is came from Athma
Athma came from Sivam that is God.
If you want to feel or experience the Jeevan and Athma means
First you know about the state of that.
Athma is not a sthoola state. it is sookshuma state.
you see the sthula material by your sthula eye.
If you want to see the air means you only feel. not see the air.
The Athman is sukshuma that's why we can't see it.
But one way is there to feel and see the Athma.
The main abstacle to see or feel the Athma is Mind.
The mind's main duty is get you in to outer conciuos.
But the Athma is in inner conciuos.
outer concious mind can't see or feel Athma.
The only way to see or feel the Athma is you divert your outer concious to inner concious.
Then you get the experience of conciousless stage that is called Thuriyam.
It is also like sleeping but it is not true sleeping it is conciousless mind.
after that you become SUPER INNER CONCIOUS
then you see the sit praanan
If your outer concious is working means you cant feel or see the Sit Pranan.
There are many more ways to see the Sit pranan
1. Sariyayil Gnanam
2. Kiriya Yogam
3. Kiriya Gnanam
4. Yoga Kirya
5. Yoga Gnanam
6. Gnana Yogam
7. Gnana Gnanam

If you want permanently mingled with God means you choose only Gnana Yogam.
That is Sutha Sanmaarkam. It is 15th stage of 16 Levels.
If you practice Sutha Sanmaarkam means you easily enter the 16 th Stage of Ganana Gnanam.
Except these all the ways are only see or feel the Athman.
But not able to continue there.

Thanking you
yours Brotherly Athman
Nakinam Sivam

Can we do Vasi Yogam

Can we do Vasi Yogam for Longer Period

What is Vasi Yogam ?
In Pathanjali's Yoga Soothra -
Vasi yogam means inhaling the air by one side of the nose
and get back the air to another nose.
In this system your mind thinking that Moolaathaara Sakra is moving to upward.
It is absolutely imagination of our mind.
Moolaathaaram to aangjai all the stages are getting only by your mind's imagination.
In Vasi yogam your breathing system will be purified.
But you lose your life level. why because all our life level is attached with our breathing level.
Also waste your pranan.
In Tamil language Breathing Air is Prana Vaivu.
This air helps to life - live long time.
In Vasi yogam we lose our prana vaivu.

In Sithar maargam
they are also telling about Vasi Yogam.
But it is different from Pathanjali's Yoga System
They are telling that inhale the air by right side of the nose.
Push it to Head by slowly.
In our human body 9 holes are seems to be there.
but there is another hole is there in our body.
It is upside of the mouth.
This is the secret path.
That path is the way to send the prana Vaivu to head.
Then the prana vaivu not return back.
It is mingled with Pranan.
It helps your mind to inner conciuosness.
The mind not go around the outer conciuosness.
This makes very easy to meditate and way to feel or see sit pranan that is Athma.
Thanking you,
yours Brotherly Athman,
Nakinam Sivam

சகஜ பழக்கம் - சமாதி பழக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நமது வள்ளல் பெருமான்
சகஜ பழக்கமே சிறந்தது - சமாதி பழக்கம் கூடாது
என்று கூறி இருக்கிறார்கள்.

சகஜ பழக்கம் என்றால் என்ன ?

சகஜம் என்றால் எப்போதும் இயல்பாக இருப்பது என்று பொருள் படும்.
நமது மனம் மற்றும் உணர்வை எப்போதும்
புருவ மத்தியத்தில் வைத்திருப்பதன் மூலம்
ஆன்மா விழிப்புணர்வு அடைந்து
எப்போதும் ஆன்மா அறிவுடன் இருப்பதன் மூலம்
நாம் உலகியலில் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும்
இறை உணர்வுடன் இருப்போம். ஆன்மா அறிவு செயல்படும்போது
நமது மனம் அதன் செயலை ஆன்மா அறிவின் துணையின்றி செய்யாது.
இது ஒரு வகையில் நாம் எப்போதும் இறை உணர்விலேயே
இருப்பதற்கான சுலபமான வழி.

மேலும் நான் என்கின்ற உணர்வும் மிக எளிதாக நம்மை விட்டு நீங்கும்.
மனம் கட்டுப்படுத்தபடுவதனால்
மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை
நம்மை விட்டு விலகுவதற்கு முற்படும்.
இதன் மூலம் அடுத்த நிலையான முக்தி நிலைக்கு
நாம் சீக்கிரமே தயார் ஆகி விடுவோம்.
சிவத்தின் உண்மை தன்மையை
தற்போதம் அற்று ஆன்மா அனுபவம் பெறும்.

சமாதி பழக்கம் என்றால் என்ன ?

பொதுவாக உலகியலில் சமாதி என்றால்
மனிதர்கள் செத்த பிறகு அவர்களை புதை குழியில்
வைத்து மண்ணை மூடி அடையாளமாக மண்ணாலோ
சுண்ணாம்பு அல்லது சிமென்ட் மூலம் ஒருமேடை அமைப்பார்கள்.
அதைதான் சமாதி என்று அழைத்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சைவ சமயத்தை சார்ந்தவர்களை
சமாதி வைக்கும் பழக்கம் நமது தமிழகத்தில் நெடுங் காலமாக
இருந்து வருகிறது. காரணம் சைவ சமயத்தில் மட்டுமே
முக்தி நிலை வரை சொல்லப் பட்டுள்ளது.
மற்ற சமயங்களில் பக்தி நிலை வரை மட்டுமே உள்ளது.

சைவ சமயத்தில் ஏன் இறந்தவரை எரிக்காமல் புதைத்தார்கள் என்றால்
உண்மையில் இறந்தவர்க்கும் முக்தி அடைந்தவர்க்கும் அந்த கால
பாமர மக்களால் வித்தியாசம் காண முடியாமல்
எரித்து விட்டார்கள் என்றால் அந்த ஆன்மா மீண்டும் உடல் எடுப்பதற்காக
பிறக்க வேண்டும்.. மேலும் எரித்தவர்களுக்கு மிக பெரிய பாவம் வந்து சேரும்.
ஆக சமாதி நிலை என்பது ஆன்மா சிவத்தோடு கலந்து
அதிலேயே லயித்து இருப்பதற்கு தான் சமாதி நிலை என்று பெயர்.
மேலும் ஆன்மா சிவ கலப்பாய் இருந்து உலகியலுக்கு மீண்டு திரும்பாத நிலை
ஏற்பட்டால் உலகிலுள்ள மனிதர்கள் அவர் இறந்து விட்டார் என்று
நினைத்து விடுவார்கள்.

ஆகவேதான் நமது வள்ளல் பெருமான்
சாலை சம்பந்தம் உடையவர்களை சமாதி செய்யுங்கள்
அவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்று கூறினார்.

உலகியலில் உள்ளவர்களுக்கு சகஜ பழக்கமே சுலபமானது.
துறவு மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே சமாதி பழக்கம் நல்லது.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு.

மூலாதாரம் எது என்பதன் ஆதாரம்

மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
பேநியதோர் அடி வயிற்றைப் பார்வை செய்வார்
பிலமுள்ள மேல் வயிற்றைத் தியானம் செய்வார்
பாநியதோர் நெஞ்சதனை நியாயம் செய்வார்
பகருகின்ற கண்டத்தை நிசமே செய்வார்
கானியதோர் கபால நிலா அறமே என்பார்
கருத்துள்ள நெற்றிக்கண் கானச்சொல்லார்
ஆணியதோர் மூக்கு முனை யதீதமென்று
அழகுள்ள இரு கண்ணும் பார்வையாமே.

பார்வைஎன்ற இந்த முறை யதீதமேன்பார்
பண்பில்லா மூடரப்பா நியாயஞ் செய்வார்
சேர்வை என்ற குரு சீஷர் இருவர் கெட்டார்
செகந்தனிலே நோய் பிறந்தே உழன்று போவார்
கொர்வைஎன்ற ஐம்பூத கவனமாகி
கொடிதான துயரத்தால் மாண்டு போவார்
ஏர்வை என்ற ஞானம் வந்து என்ன செய்யும்
எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே.

மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார். ஆகவே சுத்த சன்மார்க்க நிலையினை அடைவதற்கு சக்கரங்களை தேடி போக வேண்டாம் என்று நமது வள்ளல் பெருமானும் மற்றும் சித்தர்கள் கூறுகிறார்கள். இது யாருடைய மனதையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. நமது சன்மார்க்க அன்பர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதப்பட்டது.

எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும்.
நமது வள்ளல் பெருமானும்
எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎன
அட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதி
என்று கூறி உள்ளார்கள்.
ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள் மறைத்து வைத்தார்கள்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே

அன்பு சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு,

முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
என்னுள வரைமேலெழுந்த செஞ்சுடரே

நமது வள்ளல் பெருமானின் வரிகளுக்கு
முன்னுறு மல இருள் என்றால்
நமது ஆன்மா ஒன்றான சிவத்திலிருந்து பிரிந்து
ஜீவன் என்ற நிலையை அடைந்து
உடல் எடுத்தது. அந்த உடலுடன் அறிவும் சேர்ந்தது
அறிவு தன்னுடைய நிழலாக மனதை கொண்டது.
நமது ஆன்மா சிவத்திலிருந்து பிரிந்த போது
சுத்த மாயை வயப்பட்டது.
ஜீவன் நிலைக்கு இறங்கிய போது அசுத்த மாயை வயப்பட்டது.
காரணம் ஜீவன் உடல் எடுக்கும் போது மனம் எனும் அசுத்த மாயையும்
கூட வந்ததுதான்.

மனதின் வழி சென்ற ஜீவன் தன் செய்கையால் (கர்மங்களால்)
நல் வினை தீ வினை என்ற வினைகளை சேர்த்துக்கொள்ள தொடங்கியது. இதன் பயனாய் பிறவி
பிணி நம்மை தொடர தொடங்கியது.

இந்த பிறப்பிற்கு வித்தான அசுத்த மாயையான இரு வினையினை தான்
நமது வள்ளல் பெருமான் முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரை என்பது என்னுடைய உள்ளில் விளங்கும் ஆன்மா வரை
மேல் எழுந்த செஞ்சுடர் என்பது
உள்ளே விளங்கும் ஞான சபையில் செஞ்சுடர் அனுபவத்தை
ஆன்மா அனுபவிப்பதை குறிக்கிறது.

அதே போல்தான்

ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்த மெய்ச்சுடரே
உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே.

இந்த இரு வரிகளுக்கு

ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய் சுடரே
ஆன்மா ஜோதி தரிசனம் பெற்ற அனுபவமும்
உள்ளொளி ஓங்கிட என்பதற்கு
ஆன்மா மாயையால் மறைப்புண்டு இருப்பதனால்
அதன் ஒளி மங்கி இருக்கிறது.
அசுத்த மாயை விலகினால் ஆன்மாவின் ஒளி ஓங்கி ஒளி விடும்.
அதன் பயனாய் உயிர் எனும் ஜீவனும் ஒளி பெறும்
அப்படிப்பட்ட மாயை வென்றதனால்
சிவத்தின் உண்மை ஒளியான வெள்ளொளி தரிசனம்
பெற்றதனை குறிப்பிடுகிறார்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

Tuesday, April 6, 2010

உறும் உணர் உணர்வு

அன்புள்ள சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு,

ஒன்றான மெய்பொருள் சிவம்
அதுவே அருட்பெரும் ஜோதி
அது நம்முள் ஆன்மாவாக விளங்குகிறது.

ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில்
இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது.
அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற
புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக
ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது.
அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால்
நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண முடியும்.

ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்.

மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை
நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும்.
உணர்வு சிறிது தலை தூக்கினாலும்
அருள் தரிசனம் கை கூடாது.

ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற
உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது.
அதற்காக தான் நமது வள்ளல் பெருமான்
இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது
என்று கூறினார்கள்.

உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த
அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி.
அதுவே ஆன்மாவின் அனுபவம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

அருட்பெருஞ்ஜோதி விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நமது வள்ளல் பெருமான் அருளிய மகா மந்திரமான

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "*

என்பதற்கு விளக்கம் இறை தரிசனத்தின் போது ஏற்படுகின்ற அனுபவம் ஆகும்.
நமது வள்ளல் பெருமான் ஒரு ஜாமம் இக விசரமின்றி ஒருமையுடன்
இறை உணர்வுடன் இருந்தால் இறை அருள் கிடைக்கும் என்று கூறி
இருக்கிறார்கள். அதற்கான காரணம் மேற்கண்ட அருள் அனுபவம் வாய்க்கும்
என்பதுதான்.

அப்போது தான் என்கின்ற தற்போதம் போய்
அருள் தரிசனம் என்கின்ற அருளே வடிவாக நாம் மாறி இருப்போம்.
அதன் காரணமாக நம்மை பற்றிய ராக துவேஷங்களான
திரைகள் விலகி அடுத்து ஜோதி தரிசனம் வாய்க்கும்.
ஜோதி தரிசனத்தின் போது நாம் ஒருமை நிலையுடன் கூடிய கருணை வடிவமாக அதாவது இறை
நிலையை அடைந்து இருப்போம்.

அந்த அனுபவம் தான் நமது வள்ளல் பெருமானாரால்

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "

என்று அருளப்பட்டது.

இறை தரிசனத்திற்கு முன்பு தற்போதம் போய்
அருள் பெருகி ஜோதி தரிசனம் வாய்க்கும்
அப்போது தனி பெரும் கருணை என்றால்
ஒருமையுடன் கூடிய தயா வடிவம்
ஜீவகாருண்யமே வடிவமாக
அன்பே வடிவாக நம் நிலை மாறும்.
அருள் அனுபவமே மகா மந்திரமாக
நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

வள்ளலார் புகைபடத்தில் ஏன் விழவில்லை ?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நமது வள்ளல் பெருமானாரை புகைப்படம் பிடிக்க அன்பர்கள் சிலர்
பெருமானிடம் சம்மதம் கேட்டார்கள்.
ஆனால் பெருமானார் புகைப்படம் எடுப்பது
இறைவனுக்கு சம்மதம் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.

இருப்பினும் சில அன்பர்கள் பெருமானுக்கு தெரியாமல் ?
புகைப்படம் எடுக்க புகைப்படக் காரரை கூப்பிட்டு வந்து
புகைப்படம் எடுத்தார்கள். ஒரு முறை இரு முறை அல்ல
எட்டு முறை எடுத்தார்கள்.
ஆனால் பெருமானின் உருவம் பதிவாக வில்லை.

ஏன் புகைப்படம் பதிவாகவில்லை என்றால்
புகைப்படத்திற்கு தமிழில் நிழற் படம் என்றொரு பெயர் உண்டு.
சுத்த தேகம் பெற்றவர்கள் மாயை மற்றும் சாயை அற்றவர்கள்.
அதாவது அசுத்த மாயை மற்றும் சுத்த மாயை நீங்கப் பெற்றவர்கள்
மேலும் அவர்களது நிழல் கீழே விழாது. (சாயை என்றால் நிழல் என்று பொருள்)
நிழல் கீழே விழாதவர்களின் உருவம் நிழற் படத்தில் பதிவாகாது.
ஏனென்றால் அது நிழற் படம்.

நிழல் உள்ளவர்களுடைய உருவம் மட்டுமே
நிழற் படமாக பதியும்.
நிழல் அற்றவர்களின் உருவம் தோற்ற உருவமாக மட்டுமே
இருக்கும் அந்த உருவத்தில் வாளை எடுத்து சுழற்றினால்
வாள் உடலின் உள்ளே சென்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல்
வெளியே வரும். மேலும் இயற்கை சீற்றங்கள் அவரை ஒன்றும் செய்யாது.

மேலும் அவர்களுக்கு கால பேதம் கிடையாது.
கால பேதம் என்பது மூன்று காலங்களான
நேற்று, இன்று நாளை.
நேற்று என்பது முடிந்த ஒன்றாக நமக்கு இருக்கும்.
ஆனால் சுத்த தேகம் பெற்றவர்களால்
முடிந்த காரியத்தை மாற்றி அமைக்க முடியும்.
இனி நடக்க போகின்ற காரியத்தை முன்பே முடித்திருக்க முடியும்
நடந்து கொண்டிருக்கிற காரியத்தை எப்படி வேண்டுமானாலும்
மாற்றி அமைக்க முடியும்.

எப்படி என்றால்
கால தத்துவம் என்பது பூமியில் வாழும் நமக்கு ஒரு மாதிரியாகவும்
மற்ற கிரகங்களில் வாழ்பவர்களுக்கு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளது.
காரணம் நமது பூமி சூரியனை சுற்றி வர 365 1/4 நாட்கள் ஆகிறது
அதுவே மற்ற கிரகங்கள் சூரியனை சுற்றி வர கால வேறுபாடு உள்ளது.
நாம் எல்லோரும் சூரிய குட்ம்பத்தில் வாழ்கிறோம்.
ஆனால் சுத்த, ஞான, பிரணவ தேகம் எடுத்தவர்
பிரபஞ்சங்களை தாண்டி அண்டங்களை தாண்டி போகக் கூடிய
நிலை பெற்ற காரணத்தால் அவர்களுக்கு கால பேதம் கிடையாது.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

விபூதி - நாமம் - வேதியர் விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

திருநீறை (விபூதி) மூன்று கோடுகளாக
போடுவதன் தத்துவம்

மும்மலங்கலான ஆணவம் கன்மம் மாயை
மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து
நிர்மல நிலையினை அடைந்தவர் என்பதன்
வெளிப்பாடாக மூன்று கோடுகள்
போடப் படுகின்றன.
மேலும் சூரிய கலை சந்திர கலை அக்னி கலை
மூன்றையும் கடந்து
மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர்
என்பதையும் உணர்த்தும்.

நாமம் மூன்று கோடுகளுக்கு
சூரிய கலை மற்றும் சந்திர கலை இரண்டும்
வெண்மை நிற கோடுகளாகவும்
சிகப்பு அல்லது மஞ்சள் நிற கொடு
அக்னி கலையை குறிப்பதாகும்.
முதலில் நாமம் என்றால் என்ன ?
நாமம் என்றால் பெயர் என்று பொருள் படும்.
பெயர் என்பது ஒருவரை அடையாளம் காண உதவுவது.

நாமம் என்பதும்
ஒருவர் சூரிய கலை, சந்திர கலை இரண்டையும்
கடந்து அக்னி கலையை புருவ மத்தியத்தில்
இருந்து உச்சிக்கு அதாவது அண்டத்திற்கு
ஏற்றியவர் என்பது அடையாளமாக முற்காலத்தில்
ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும்
வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது.
மேலும்
நெருப்பின் நிறமான சிகப்பு மற்றும் மஞ்சள்
நிறத்தில் நடு கோட்டினை வரைந்தார்கள்.

அதே போல்
பூணூல் என்பதும் ஆகும்
பூணுலை தமிழில் முப்புரி நூல் என்று அழைப்பார்கள்.
முப்புரி என்றால்
சூரிய கலை ஒரு நூலாகவும், சந்திர கலை ஒரு நூலாகவும்
அக்னி கலை ஒரு நூலாகவும் கொள்ளப்பட்டது.
இது
ஒருவர் அக்னி கலையை அண்டத்திற்கு
ஏற்றி தத்துவங்கள் கடந்தவர் என்பதை
உணர்த்தும் முகமாக
அந்த கால பெரியவர்களால் வகுக்கப் பட்டது.

ஆனால் இன்று
அது ஜாதி ஆசாரமாக மாறி விட்டது.
காரணம் தத்துவத்தின் பொருள் விளங்காமல்
இதை சடங்காக மாற்றியதுதான்.

அதே போல்
பிராமணன் என்பவன் பிரம்மம் அனைத்தும்
உணர்ந்து தானே பிரம்மம் என்கின்ற அனுபவம் பெற்றவன்
அந்தணர் என்பவர்
ஆதி அந்தம் ஆன இறைவனின் நிலையினை
உணர்ந்து இறைவனோடு கலக்கும் முடிந்த நிலையான
அந்தம் என்கின்ற நிலையை அடைந்தவர் என்று பொருள் படும்.

வேதியர் என்பது
இங்கு வேதத்தை ஓதுபவர் என்று தவறாக
பொருள் கொள்ளப் படுகிறது.
வேதி என்றால் சுட்டு எரித்து தூய்மை படுத்துவது
என்று பொருள் படும்.
மும்மலங்களையும் ஞானத் தீயினால் சுட்டு
மும்மலம் அற்ற நிர்மல நிலையினை அடைந்தவர்
என்று பொருள் படும்.
ஆகவேதான் சிவ பெருமானையும் நிர்மலமான
வேதியன் என்று அழைக்கிறார்கள்.

யார் ஒருவர் ஞான நிலையினை
அடைந்து மும்மலம் நீக்கி
சுத்தம் அடைகிறார்களோ அவர்களே
பிராமணர்கள், வேதியர்கள், அந்தணர்கள்.

ஆகவேதான் நமது வள்ளல் பெருமானும்
ஆதியிலே வல்லவன் போட்ட பூட்டேன்று
ஞானத்தின் உட்பொருளை பற்றி கூறி உள்ளார்கள்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று
அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.
அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.

அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா
என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது.
அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.
அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து
இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.
அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.
சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று
கிணற்று தவளை கூறியது.
அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்
என்று பதில் கூறியது.

உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியது
கடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விட
பெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.
நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.

அது போல்தான் ஞான மார்க்கத்தில்
சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று
அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது.
ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள்
உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.

ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு அதையே பிடித்து கொண்டு
அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்
ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.
நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு
ஆராய்ந்து கற்க வேண்டும்.

நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால்
நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும் இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு.

சன்மார்க்கத்தில் ஞான நிலை

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

பதஞ்சலி யோக சூத்திர முறையில் யாரும் ஞான நிலையினை அடைந்ததாக தெரியவில்லை. காரணம் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு சரியான விளக்கம் யாராலும் எழுதப்படாததுதான். ஆனால் நமது சன்மார்க்கத்தில் ஞான நிலையினை அடைவதற்கு கீழ் ஆதாரம் ஆறு வுள்ளதைப்போலே மேல் ஆதாரம் ஆறு நிலைகளை கடக்க வேண்டும். மேல் ஆதாரம் ஆறும் புருவ மத்தி தொடங்கி அண்டம் வரை நீளும் . இங்கு புருவ மத்தியம் மூலாதாரமாக வுள்ளது. இந்த புருவமத்தி மூலதரத்தை காற்றின் துணை கொண்டு மேல் ஏற்றுவதன் மூலம் உயர் ஞான நிலையான் நாத விந்து நிலையினை அடைய முடியும். நமது வள்ளல் பெருமானும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள். அவ்வையாரின் அகவலில் மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பி என கூறுகிறார்கள். பதஞ்சலி கூறுவது போலே மூலாதாரம் குதம் எனப்படும் மலக்குடலுக்கு அருகில் இருக்கும் என்றால் அந்த இடத்தில் மூண்டு எழுகின்ற கனல் எங்கு உள்ளது. மூண்டு ஏழு கனல் புருவ மத்தியத்தில் மட்டுமே உள்ளது. அதனை காலால் எழுப்பி என்றால் கால் என்றால் காற்று ஆக காற்றின் மூலமாய் தூண்டி மேல் ஆதாரம் ஆறையும் கடக்க வேண்டும். அங்குதான் 1008 இதழ் கொண்ட தாமரை மீது நாதம் விந்து நிலைகள் உள்ளன என்று சித்தர்களும் கூறி உள்ளனர். அந்த நிலையினை அடைவதக்கு துரியம் கடந்து துரியாதீதம் நிலையினை அடைய வேண்டும். இங்கு துரியம் மற்றும் துரியாதீதம் என்பது ஒரு சிலர் நான் துரியாதீதம் கடந்து வெட்டவெளி கடந்து விட்டேன் என்பது போலே சுலபமானது இல்லை. உறும் உணர் உணர்வும் உணர்வெலாம் கடந்த அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி - தனு கரனாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெரும்ஜோதி - துரியமும் கடந்த சுகம் பூரணம் தரும் போன்ற வள்ளல் பெருமானின் வரிகளால் உணர வேண்டும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

ஆன்மா அறிவென்னும் குரு

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

குரு என்பவர் நடை முறையில்
இரு வகையாக பிரிக்கப் படுகிறார்.
காரிய குரு, காரண குரு.
ஞானத்தை தேடுபவர்கள்
வாழ்வியலில் உள்ள உலகியல் குருக்களை
விடுத்து சூக்குமமாய் உள்ள ஆன்மா குருவை
சரண் அடைந்தால்
அந்த ஆன்மா குரு நமக்கு
உண்மை வழியை காட்டுவார்.
வாழ்வியலில் உள்ள குருக்களின் அனுபவங்கள்
மாயை வயப்பட்டது. ஏனென்றால் வாழ்வியலில்
உள்ளவர்கள் முழு ஞானத்தை அடைவது என்பது
மிகப்பெரிய சவால்.
அப்படி வாழ்வியலில் உள்ள உண்மை குருவின் தன்மை
உலக விஷங்களை நாடாது.
அவருடைய அறிவு ஆன்மா அறிவாக இருக்கும்.
ஆகவே நாம் ஞான பாதையில் முன்னேற
சரியான குரு சூக்கும நிலையில் உள்ள
ஆன்மா அறிவென்னும் குருவாகும்.
அதே போல் வாழ்வியல் குருக்களின்
அனுபவங்கள் நமக்கு பாடமாக அமைவதை விட
நமக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லையே என்று
நமக்கு நம் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி விடும்.
நமது அனுபவத்தை மற்றவரின் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்து
அவரின் அனுபவம் எனக்கு ஏற்பட வில்லையே என்று
நம்மை வழி திருப்பி விட்டுவிட வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஒவ்வொருவரும் நம்மிடம் சூக்குமம் ஆக உள்ள
ஆன்மா அறிவின் துணை கொண்டு
ஞான அனுபவத்தை பெற முயல்வோம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

ரூபா போனால் பாபா ஆகலாம்

ஒரு சமயம் வட நாட்டிலுள்ள ஒரு சாதுவை ஒரு பணக்காரர் பார்க்க சென்றார்.
வட நாட்டில் ஞானிகளை பாபா என்று அழைப்பார்கள்.
அங்கு நிறைய மனிதர்கள் அந்த பாபா விடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள்.
அந்த பணக்காரரும் பாபாவை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது அவர் பாபாவை பார்த்து
பாபா என்னிடம் பணம் நிறைய இருக்கிறது ஆனால்
நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.
நீங்களோ பணம் எதுவும் இல்லாமல் மிகவும் நிம்மதியாக
காணப் படுகிறீர்கள். மேலும் அனைவருக்கும் ஆசி வழங்கி
அனைவரையும் அமைதி படுத்துகிறீர்கள்.
ஆகவே நானும் பாபா ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு பாபா ரூபா போனால் பாபா ஆகலாம். என்று பதிலளித்தார்.

பணக்காரர் வீட்டிற்கு வந்த உடன் தன்னிடம் இருந்த ரூபாய்
அனைத்தையும் பாபாவின் ஆசிரமத்திற்கு அளித்து விட்டார்.
பின்பு மறுபடியும் பாபாவிடம் போய் நான் இப்போது பாபா ஆகி விட்டேனா
என்று கேட்டார். மீண்டும் பாபா ரூபா போனால் பாபா ஆகலாம் என்று
பழைய படியே கூறினார்.

பணக்காரர் வீட்டிற்கு சென்று தன்னுடைய நிறுவனங்கள் அனைத்தையும்
ஆசிரமத்திற்கு எழுதி வைத்தார்.
பின்பு மறுபடியும் பாபாவிடம் போய் நான் இப்போது பாபா ஆகி விட்டேனா
என்று கேட்டார். மீண்டும் பாபா ரூபா போனால் பாபா ஆகலாம் என்று
பழைய படியே கூறினார்.

பணக்காரர் வீட்டிற்கு சென்று அமைதியாய் இருக்க முயன்றார்.
ஆனால் அவரது மனைவி எல்லா பணத்தையும் ஆசிரமத்திற்கு
எழுதி வைத்து விட்டு என்னை ஏழை ஆகி விட்டீர்களே என்று திட்ட
ஆரம்பித்தாள்.

இனி வீட்டில் இருக்க முடியாது என்று ஆசிரமத்தில் வந்து தங்க ஆரம்பித்தார்.
அப்போது உலகத்தில் எல்லா உயிர்களும் படுகின்ற கஷ்டங்களை உணர
ஆரம்பித்தார்.

இதன் காரணமாக அவருக்கு ஜீவ காருண்யத்தின் பயனாய் கிடைக்கும்
ஒருமை நிலை ஏற்பட்டது.
ஒருமை நிலையில் எல்லா உயிர்களையும் தானாக காண்கின்ற தன்மை
ஏற்பட்டது.

அப்போதுதான் அவருக்கு பாபா சொன்ன ரூபா போனால் பாபா ஆகலாம்
என்ற கருத்துக்கு பொருள் விளங்கியது.
மற்ற உயிர்களை அந்த ரூபத்தால் பார்க்காமல்
தன்னுடைய ரூபமாக கான்பதைதான் பாபா கூறினார்.
என்பதை உணர்ந்தார்.

இந்த முறை பாபாவை காண சென்றார்.
பாபா எழுந்து வந்து வாருங்கள் பாபா என்று ஆற தழுவி கொண்டார்.

ஆகவே அன்பர்களே
ஜீவ காருண்யம் என்பது
எல்லா உயிர்களையும் தானாக காண்பதாகும்.
பிற உயிர்கள் படுகின்ற துன்பங்கள்
தான் படுவதாக நினைத்து உதவுவது ஆகும்.
அதுவே ஒருமை கல்வி. அதன் அடுத்த படியே
சாகா கல்வி.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

மனம் எனும் ஓர் பேய் குரங்கு

நமது வள்ளல் பெருமானார் மனம் என்பது நம்மை
கீழ் நிலைக்கு தள்ள எப்போதும் தயாராக இருப்பதாக
நம்மை எச்சரிக்கிறார்.

அப்படிப்பட்ட மோசமான மனதை ஒரு சிலர் வளர்க்க கற்று கொடுக்கிறார்கள்.
மனமானது வளர்ந்தால் அது உலகியல் நாட்டத்தையே நாடும்.
அடுத்து நம்மை அடிமைப்படுத்தி அதன் பாதையில் செல்ல வைத்து விடும்.

நமது சன்மார்க்கத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால்
நாம் மனதை ஒடுக்கி அதன் செயல் எந்த விதத்திலும் வெளிப்படா வண்ணம்
நம்ம காத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட மனதை பற்றி நமது வள்ளல் பெருமான்
கீழ் கண்ட பாடல்களில் தெளிவு படுத்தி உள்ளார்கள்.

மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை பயலே நீதான்
மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய்
இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை ஆனாலோ
திணை அளவு உன் அதிகாரம் செல்ல வோட்டேன் உலகம்
சிரிக்க உன்னை அடக்கிடுவேன் திருவருளார் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய்
ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே.

பன் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச பயலே
பதையாதே சிதையாதே பார்க்குமிடம் எல்லாம்
கொன் முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது
குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது
என் முன் ஓர் புல் முனை மேல் இருந்த பனி துளி நீ
இம் எனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ
பின் முன் என நினையேல் காண் சிற்ச் சபையில் நடிக்கும்
பெரிய தனித் தலைவனுக்குப் பெரிய பிள்ளை நானே.

விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்து விரிந்து அலையாதே மெலியாதே விடயம்
புரிந்த நெறி புரிந்தவமே போகாதே பொறி வாய்ப்
புரியாதே விரையாதே புகுந்து மயங்காதே
தெரிந்து தெளிந்து ஒரு நிலையிற் சித்திரம் போல் இரு நீ
சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்து எனை நீ யாரென்று பார்த்தாய் சிற்ச் சபை வாழ்
பத்தி தனக்கே அருட் பட்டம் பலித்த பிள்ளை நானே.

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டுப் பயலே
பல் போறியாம் படுக் காளிப் பயல்களோடுங் கூடி
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி
தியங்காதே ஒரு வார்த்தை திரு வார்த்தை எனவே
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியோடு வெரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை
பேய் மதியா நீ எனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன் தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே. - வள்ளலார்.

மேற்கண்ட பாடலில் வள்ளல் பெருமான் மனத்தை ஒடுக்கி
செயலிழக்க செய்ய வேண்டும் என்பதை கூறி இருக்கிறார்கள்.
அதை விடுத்து மனத்தை வளர்த்தால் அது
நம்மை கீழ் நிலைக்கு தள்ளி விடும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

சுற்றுலா வந்தவர்கள் நாம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

மனதின் தன்மை அது எந்த பொருளை காண்கிறதோ
அந்த பொருளை தன் வசம் ஆக்க முயற்சிக்கும்.
அடுத்து அந்த பொருளை தன் அடிமையாக ஆக்கி விடும்.
அப்படிப்பட்ட மனம் நம்மோடே இருக்கும் போது
நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உலகில் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால்
மனம் போன போக்கினிலே போக வேண்டாம்
என்ற வாக்கிற்கேற்ப
மனதை நம் அறிவின் துணை கொண்டு அடக்கி
வாழ் நாளை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

மனமானது
ஆசை காட்டி அதன் வழி போக வைக்கும்
பயமுறுத்தி அதன் வழி நடக்க வைக்கும்.
பற்றுகளை வைத்து அதன் வழி செலுத்த வைக்கும்
பாசங்களை வைத்து அதன் வழி கேட்க வைக்கும்

அப்படிப்பட்ட மனதை
நாம் பேராசை படுவதிலிருந்து விடுபட்டால்
அச்சபடுவதிலிருந்து விலகி இருந்தால்
எத்தன மீதும் அதிக பற்று வைக்காமல் இருந்தால்
எவர் மீதும் பாசம் வைக்காமல்
அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால்
மனமானது நம் அறிவின் வழி நடந்து
நமது அடிமையாக பணி புரியும்.

நாம் ஆசைப் படுவதிலிருந்தும், அச்சப்படுவதில் இருந்தும்,
பற்று வைப்பதிலிருந்தும், பாசம் வைப்பதிலிருந்தும்
விடுபடுவதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது

அது
நாம் அனைவரும் இந்த பூமிக்கு சுற்றுலா பயணியாக
வருகை புரிந்து இருக்கிறோம் என்ற எண்ணத்துடன்
வாழ்ந்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
நாம் ஊட்டிக்கோ, காஷ்மிருக்கோ அல்லது ஆஸ்திரேலியா விற்கோ
சுற்றுலா செல்வதாக வைத்துகொண்டால்
நமக்கு எவ்வளவு குறைவான பொருட்கள் தேவையோ
அந்த அளவுக்குத்தான் பொருட்களை எடுத்து செல்வோம்.
அதே போல் நாம் வாழ்வதற்கு எவ்வளவு குறைந்த
பொருட்கள் தேவையோ அந்த அளவு பொருட்களை மட்டும்
நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் சுற்றுலா சென்ற இடத்தில் நமக்கு தேவை இல்லாத பொருட்களை
நாம் என்ன செய்வோம் அங்கே வேறு யாருக்காவது கொடுத்து விடுவோம். காரணம் அது
நமக்கு சுமையாக ஆகி விடும் என்பதனால்தான்.

அடுத்து நம்மோடு சுற்றுலா வந்தவர்கள் மீது அன்பு செலுத்துவோம் ஆனால் அவர்கள்
மீது பாசம் வைக்க மாட்டோம்.
ஏனென்றால் அவர்கள் நம்மோடு வர மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும். அதே போல்
தான் நம்மோடு பிறந்தவர்கள், நமக்கு பிறந்தவர்கள், நம்மோடு வாழ்பவர்கள், நக்கு
துணையாக இருப்பவர்கள்
அனைவருமே நம்மோடு சுற்றுலா வந்தவர்கள்.
அவர்களிடம் அன்பு வைக்கலாம் ஆனால் பாசம் வைக்க கூடாது.

நாம் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதாக இருந்தால்
அந்த பனியின் குளிரை தாங்கும் அளவிற்கு கம்பளி உடை
அணிந்து செல்வோம். காரணம் அந்த பிரதேசத்தில்
இருப்பதற்கு அந்த உடை இருந்தால் தான் குளிர் நம்மை தாக்காது.
அது போல் இந்த பூமியை சுற்றி பார்ப்பதற்கு
நாம் மனிதன் என்ற உடை உடுத்தி வந்து இருக்கிறோம்.
ஆக நமது உடை இந்த பூமிக்கான உடை.

மீண்டும் நாம் வந்த இடமான சிவ பிரதேசத்திற்கு
செல்லும் போது இந்த அசுத்த உடையை விட்டு விட்டு
அல்லது இந்த உடையை சுத்தப்படுத்திக் கொண்டு
நமது சொந்த இடத்திற்கு திரும்ப போகிறோம்.

அப்படி இருக்கும்போது
நமது உடல் நமக்கு சொந்தம் இல்லை
நாம் வசிக்கும் நமது வீடு நமக்கு சொந்தம் இல்லை
நமது உறவினர்கள் நண்பர்கள் நமக்கு சொந்தம் இல்லை
நம்மிடம் உள்ள பொருட்கள் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை.
நாம் பெற்ற பதவி புகழ், பணம் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாததனால்
நாம் எதன் மீதும் பற்றோ, பாசமோ, ஆசையோ வைக்காமல்
எதற்கும், எவருக்கும் பயப்படாமல்
மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நாம் வாழுகின்ற இந்த பூமி
அண்டத்தில் உள்ள பால் வெளியில் - பிரபஞ்சத்தில்
ஒரு சிறிய புள்ளி அளவே உள்ளது.
அப்படிப்பட்ட புள்ளி அளவுள்ள பூமியில் உலகின் பணக்காரர் என்று
சொல்லிக்கொல்பவரின் சொத்துக்கள் கண்ணுக்கு தெரியாத அணு அளவே உள்ளது.
இந்த நாட்டை ஆள்கிறேன் என்று சொல்பவரின் எல்லை
கண்ணுக்கு தெரியாத சிறிய அளவே உள்ளது.

எனக்கு பத்து வீடுகள், பெரிய பண்ணை நிலம் உள்ளது என்று
சொல்பவர்களின் சொத்துக்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தில்
கண்ணுக்கு தெரியாத அளவே உள்ளது.
இறைவனின் படைப்பில் நமது பூமி மிக சிறியது.
அப்படிப்பட்ட பூமியில் நமக்கு சொந்தமான சொத்துக்கள்
வீடு, நிலம், கார், பைக், போன்ற அனைத்துமே
பிரபஞ்சத்தை அளவிடும்போது கண்ணுக்கு தெரியாத
ஒரு சிற்றணு வடிவாகவே உள்ளது.

ஆனால் நாம்
இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்,
இந்த நாட்டில் நான் பெரிய பணக்காரன்
இந்த மாநிலத்தில் பெரிய வசதியானவன்
இந்த ஊரில் நான்தான் மிக உயர்ந்தவன்
எங்கள் தெருவிலேயே நான் தான் வசதி படைத்தவன்
என்னுடைய சொந்தகாரர்களிலேயே நான்தான் பணக்காரன்
என்னுடைய நண்பர்களிலேயே நான்தான் வசதியான பொருட்களை
வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பொருள் யாரிடமும் இல்லை.
என்று நான் என்கின்ற அகங்காரத்தின் காரணமாக பெருமை படுகின்றோம்.

ஆனால் நாம் வாழும் இந்த பூமி பிரபஞ்சத்தில் ஒரு சிறிய புள்ளி அளவே.
அப்படிப்பட்ட புள்ளியில் நாம் கண்ணுக்கு தெரியாத சிற்றனுவாக உள்ளோம்.
இது எப்படி இருக்கிறது என்றால்
நமது உடம்பில் உள்ள அணுக்கள் ஒவ்வொன்றும்
நான்தான் பெரியவன் நான்தான் பெரியவன் என்று
கூறிக்கொண்டு இந்த பகுதியை நான் ஆட்சி செய்கிறேன் என்று
கூறிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால்.அதை நாம் அறிந்தால்
நமக்கு எப்படி சிரிப்பு வருமோ.

அதுபோல மனிதர்களாகிய நமது செயல்கள் (அகங்காரங்கள்)
இறைவனுக்கு சிரிப்பைதான் வரவழைக்கும்.

ஆகவே நமது சிறுமையை நினைத்தால்
இறைவனின் பெருமையை நினைத்தால்
நமக்கு நான் என்கின்ற அகங்காரம் தானே ஒழியும்.

ஆகவே நம்மிடம் இருக்கும் பொருட்களில்
நமக்கு போக உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து
அனைவரையும் சந்தோஷபடுத்தி
நாமும் சந்தோஷமாக வாழ்வோம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

அன்பும் சிவமும் ஒன்றே !

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

அன்பும் சிவமும் ஒன்றே !

அன்பே சிவம் என்பதே சன்மார்க்கத்தின் முடிந்த முடிபான கொள்கை.
அன்பும் சிவமும் ஒன்றே அன்பு வேறு சிவம் வேறல்ல
அப்படிப்பட்ட அன்பு மனிதர்களிடம் அவர்களது பக்குவ நிலைக்கு ஏற்ப
ஒவ்வொரு வடிவில் வெளிப்படுகிறது.
உயர்ந்த ஞான நிலையில் உள்ளவர்களுக்கு
அது ஜீவகாருன்யமாக அருளாக வெளிப்படுகிறது.
பக்குவப்பட்ட ஆன்மாக்களிடம் சுத்த அன்பாக வெளிப்படுகிறது.
பக்குவம் இல்லாத ஜீவர்களிடம் அது காமமாக வெளிப்படுகிறது.
அன்பின் உயர்ந்த நிலை ஜீவகாருண்யம்.
அன்பின் கீழ் நிலை காமம்.

அன்பின் கீழ் நிலையான காமம் ஏன் நம்மை பற்ற வேண்டும் ?
காரணம் நாம் அனைவரும் காமத்தினால் பிறந்தவர்கள்.
மேலும் நம்முடைய உடலில்
ஆணாக இருந்தால் பெண் தன்மையும்
பெண்ணாக இருந்தால் ஆண் தன்மையும்
பிறக்கும் போதே நமது உடலில் இணைந்துள்ளது.

மேலை நாட்டு மனோ தத்துவ ஞானி சிக்மன்ட் பிராய்ட்
நமக்கு காமம் ஏறபட முதல் காரணம் நாம் குழந்தையாக இருந்த போது
நாமருந்திய தாய் பாலில் ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்.
அதற்கு முன்பே நமது வள்ளல் பெருமானாரும்
குழந்தை பருவத்தில் பால் உணும் போதே
அதில் அருவருப்பு ஏற்பட்டதாக எழுதி உள்ளார்கள்.
அவர்தான் கருவிலேயே திருவை அடைந்தவர் ஆயிற்றே.
ஆகவேதான் காமத்தை பால் உணர்வு என்று
நமது தமிழில் காரண பெயராக அமைத்தார்கள்.

மேலும் திருவள்ளுவ தேவரும்
மாதாந்த ரத்தமல்லோ சடலமாச்சு
என்று எழுதி உள்ளார்கள்.
அதாவது ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோநிததுடன்
சேர்ந்து குழந்தையாக உருவெடுக்கிறது.
அந்த குழந்தை தாயின் ரத்தத்தினால் வளர்க்கப் படுகிறது.
அப்படி வளர்ந்த குழந்தை எப்படி காம வயப்படாமல் இருக்கும்.

ஆகவேதான் சித்தர்கள் இந்த காம உடலை
தூய உடலாக மாற்றிக்கொள்ள வழி கண்டார்கள்.
தூய உடலாக மாறுவதற்கு மனம் ஒரு பெரிய தடையாக
இருந்ததனால் முதலில் மனதை தன் வசப்படுத்தி
அறிவே வடிவாக மாறினார்கள்.
சித்தர்கள் என்றால் அறிவே வடிவானவர்கள் என்று பொருள்.

நமது மனம் மட்டுமே உருவ பேதம் மற்றும்
பால் பேதம் பார்க்கும் தன்மை உடையது.
மனம் அறிவின் வழி நடக்க தொடங்கினால்
பேதம் நீங்கி அனைத்து உயிர்களையும்
சகோதர உயிராக காண தோன்றும்.
அங்கு அன்பு ஊற்று எழும்.
அன்பு ஊற்று எழும் நிலையில் அடுத்து
ஜீவ காருண்யம் நம் நிலையாக ஒன்றி விடும்.
ஜீவ காருண்யமே வடிவாக மாறினால்
உயிர்களை தானாக காணும் ஒருமை தானே வந்தெய்தும்.

ஒருமை வந்தால் இறை அருள் தானே வரும்.
இறை அருள் வந்தெய்தினால்
சிவமும் நாமும் ஒன்றாவோம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

நான் யார் விளக்கம்

நான் யார் விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு

நமது புராணங்களில், ஞான நூல்களில், சித்தர் இலக்கியங்களில், அற நூல்களில்,
நான் யார் என்ற கேள்விக்கு விளக்கங்கள் பலவாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.
அதில் நமது ஆன்மாவே நான் என்றும், நமது ஜீவனே நாம் என்றும்,
வுடலோடு கூடிய ஜீவனே நான் என்றும் பலவாறாக கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் நமது வள்ளல் பெருமானார் மற்றும் சித்தர்களும்
ஜீவனும் சிவமும் ஒன்றாக கலப்பதற்கு முன்பு
விளங்கும் நிலையினை அதாவது நாம் வுலகில் வுடல் வுணர்வு,
மன வுணர்வு, அறியும் வுணர்வு ஆகிய வுனர்வுடன் கூடிய வுனர்வையே
நான் என்று கூறுகிறார்கள்.

வுனர்வுறு வுணர்வும் வுனர்வெலாம் கடந்த
அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி

என்று நமது வள்ளல் பெருமான் கூறியிருப்பதிலிருந்து
நான் என்பது வுனர்வாகவே இருக்கிறது.
அந்த நான் என்கின்றன வுணர்வு கடந்து ஜீவனும் ஆன்மாவும்
கலக்கும் ஜீவ ஐக்கியமே சிவா நிலை அடைதலாம்.
ஆக நான் என்பது வெறும் வுணர்வு மட்டுமே.
ஆதியில் சிவம் இயக்கமற்று நிலை கொண்டு இருந்த போது
சக்தி என்னும் இயக்கம் சலனமாக தோன்றியது.
சலனத்தின் விளைவாக ஒன்று என்ற நிலை மாறி
இரண்டு என்கின்ற நிலையின் காரணமாக ஆன்மா ஜீவன்
என்கின்ற இரு நிலை தோன்றியது. ஜீவன் நான் என்கின்ற
வுணர்வு பெற்றபோது இந்த வுலகம் தோன்றியது.
அதன் பின் ஜீவன் செயலாற்ற தொடங்கியதும் வினை தோன்றியது.
அது நல் வினை என்றும் தீ வினை என்றும் இரண்டாக பிறப்பிற்கு மூலமாய் அமைந்தது.
ஆக நாம் நான் என்கின்ற வுணர்வை விடுத்து ஒருமை நிலையை அதாவது
சிவ நிலையை அடைவதின் மூலமாய் பிறப்பிலிருந்து விடுபடலாம்.
ஆக நான் என்பது வுணர்வு மட்டுமே என்பதை நாம் அறியலாம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு