Monday, May 3, 2010

கேள்வி - பதில் -2

2)முதல் ஐந்து திருமுறைகள் சைவ சித்தாந்த ரீதியாகப் பாடிய வள்ளலார் ஏன் ஆறாம் திருமுறையை மட்டும் நேர் எதிர்கருத்துடன் பாடவேண்டும்?

துவைதம் கரைந்தால் அத்வைதம். இங்கே அ + துவைதம் = அத்வைதம் எனப்படும்.
துவைதம் கடவுளை நம்மை விட்டு வெளியில் காண்பது.
அத்வைதம் என்பது கடவுளை நம்முள்ளே நாமாக காண்பது.
வள்ளல் பெருமான்
தியானிக்கும் போது நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.
எதாவது பொருளை வைத்து தியானிக்கும் போது
உருவம் கரைந்து அருவமாக மாறும்.
இது எல்லா ஞானிகளுக்கும் ஏற்பட்ட அனுபவம்.
இந்த அருவ நிலை வாய்க்கும் வரை உருவ வழிபாடு தேவைபடுகிறது.
உருவ நிலை மாறி அருவ நிலை வாய்க்க இது 12 ஆண்டுகள்.
கூடுமானவரை இந்த கால கட்டம் எல்லா ஞானிகளுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
வள்ளல் பெருமானும் அருவ நிலை வைத்த உடன் உருவ வழிபாட்டிற்கு
முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.
இருப்பினும் நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்பதனால்
விளக்கினை வைத்து அதன் தீபத்தை உற்று நோக்கி
நமது புருவ மத்தியத்தில் ஜோதி ஒளிர்வதாக பழக்கப் படுத்த சொன்னார்கள்.
காரணம்
உருவம் கரைந்து அருவம் வாய்க்கும் போது ஜோதி தரிசனமே வாய்க்கும்.
ஆக உருவம் கரைவதற்கான காலம் குறைவாகும்.
இந்த ஜோதி தரிசனம் அனைத்து ஞானிகளுக்கும் பொதுவான அனுபவமாகத்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment