Monday, May 3, 2010

காரிய காரணம் கடந்தவன்

தமிழில் எல்லா வார்த்தைகளுமே கூடுமான வரை காரண பெயராகத்தான் உள்ளது.
மற்றும் இடு குறி பெயர்களாக உள்ளது.
காரணம் தமிழ் ஆக்கிய சித்தர்கள்
காரண காரியம் ஆராய்ந்தே பெயர்களை சூட்டி இருக்கிறார்கள்.

அதுவும் இறைவனை காரிய காரணம் கடந்தவன் என்பதை காட்ட
இரண்டு கண்கள் காரியப்பட்டால் மனம் காரணப் படும்.
இந்த இரண்டையும் கடந்தால் மூன்றாவதான ஆன்மா காரியப்படும்.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் மூன்றாவதாக காரண காரியம் கடந்த ஆன்மாவை குறிக்கும் விதத்தில் அமைத்தார்கள்.

1 நமது ஆன்மா உயிரும் மெய்யான உடலும் இயங்கு நிலையிலும் எந்த இயக்கத்தையும் சாராமல் தனித்து இருக்கும்.

2 எனினும் மெய் என்னும் உடலினுள்ளே இருப்பதால் ஆன்மாவையும் மெய் என கொள்ள வேண்டும்.

3 ஆன்மா மெய் எனும் உடலோடு சேர்ந்து இருந்தாலும் இறைவனோடு கலக்கின்ற புணர்ச்சியின் பொது தன்னை அறியும்.

என்று பொருள் படும்.

மேலும் இந்த ஆன்மாவை அறிய உதவும் ஆயுதம் எது ?
அது பாதம்
இறைவனின் பாதத்தை பிடிக்க சொன்னது எதற்காக ?
பாதம் என்றால் கால்
கால் என்றால் காற்று
நாம் விடுகின்ற மூச்சே கால் எனப்படும்.
இதைதான் காற்றை பிடிக்கும் கணக்கரிவாளர் கூற்றை உதைப்பார்
என்று சொன்னார்கள்.
நாம் விடுகின்ற மூச்சுக்கும் நமது ஆயுளுக்கும் தொடர்பு உள்ளது என்று சித்தர்கள் வகுத்து இருக்கிறார்கள்..
உள்ளே போகின்ற சுவாசம் மேலே அண்டத்தில் சேர்ந்தால்
ஞான நிலை வாய்க்கும்.
ஆகவே ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்தால்
அனைத்தும் இறை நிலையை தெரிவிக்கும் என்பதனை உணரலாம்.

அன்புடன்
சிவம்

No comments:

Post a Comment