Friday, November 26, 2010

தாய் மொழி கல்வி

ஆங்கில வழி கல்வியால் கல்வியின் தரம் மேம்படும் என்பது ஒரு மாயை.

இன்றை பள்ளி பாடத்திட்டம் மனப்பாடத்தில் யார் சிறந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களே சிறந்த படிப்பாளிகள் என்பதாகதான் அமைந்துள்ளது.

அதாவது எவர் ஒருவர் உண்ட உணவை அப்படியே செரிமானம் இல்லாமல் வாந்தி எடுக்கின்றாரோ அவரே ஆரோக்கியமானவர். உண்ட உணவை செரிமானம் செய்து அதை உடலுக்கு ஊட்டமாக்கி கழிவை வெளியிடுபவர் ஆரோக்கியம் குறைந்தவர் என்பது போலதான் நமது கல்வி முறை உள்ளது.

கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமைய கூடாது.

தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.

எந்த ஒரு குழந்தைக்கும் தாய் மொழி கல்விதான் சிறந்தது.

நம்முடைய துரதிஷ்டம் தாய்மொழி கல்வியை கற்றால் சமுகத்தில் மதிப்பு குறைவு. அறிவாளியாக முடியாது என்று போலியான முகமுடி ஏற்பட்டு விட்டது.

மேலும் கிராம பகுதிகளில் உள்ள நிறைய பள்ளி ஆசிரியர்களுக்கே ஆங்கில மொழி அறிவு குறைவாகவே உள்ளது. அவர்களை வைத்து குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பித்தால் குழந்தைகளின் நிலை ?

ஆகவே கற்பித்தல் முறை தாய் மொழியில் இருக்க வேண்டும்.
இருப்பினும் ஆங்கில மொழி அறிவை வளர்க்க பேசும், எழுதும் திறனை வளப்படுத்தும் விதத்தில் மொழிப்பாடங்கள் அமைய வேண்டும்.

ஆங்கில வழி கல்வி கூடங்களில் கூடுமானவரை ஆங்கில சூழலை (Atmosphere) பள்ளிகளில் உருவாக்கி வைத்துள்ளார்கள். இது மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் மீதுள்ள பயத்தினை போக்கி விடுகிறது.

ஆனால் கிராம பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இது சாத்தியமா ?

நமது கிராம பகுதிகளில் உள்ள ஒருவரை இலண்டன் மாநகரிலோ அல்லது ஆங்கிலம் பேசும் மக்கள் நிறைந்த நகரிலோ இரண்டு ஆண்டுகள் தங்க வைத்தால் அவர் தானாகவே ஆங்கிலத்தை கற்றுக்கொள்வார் காரணம் சூழல்தான்.

கிராம பகுதிகளில் ஆங்கில வழி கல்வி ஏற்படுத்துவது என்பது பள்ளிக் கல்வியை பாதியில் விட்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே செய்யும்.

No comments:

Post a Comment