Sunday, April 11, 2010

ஆய்த எழுத்து

அன்புள்ள நண்பர்களுக்கு,

தமிழ் மொழி எங்கு ஆரம்பித்தாலும் முடிவில் இறை நிலையை அடையும் வழியை
கான்பித்தலையே முடிவாக கொள்ளும்.
அது போல் தான்
தமிழ் எழுத்துக்களை வடிவமைத்த சித்தர்கள்
தமிழில்
உயிர், மெய், ஆயுதம் என்று மூன்றாக பிரித்தார்கள்.
நம்முடைய உயிர் எப்படி தனியாக இயங்காதோ,
நம்முடைய மெய் அதாவது உடல் எப்படி தனியாக இயங்காதோ
அதேபோல் ஆயுதமும் தனித்து இயங்காது.
உயிருடன் உடலான மெய் சேரும்போதுதான் இயக்கம் தோன்றுகிறது. அதே போல்தான் தமிழில்
உயிர் எழுத்துக்களுடன் மெய் எழுத்துக்கள் சேரும் பொது இயக்க நிலையினை அடைகிறது.
சரி ஆயுதம் என்று ஒரு தனி எழுத்து எதற்க்காக படைத்தார்கள்.
உயிரும் மெய்யும் சேர்ந்தால் உலகியல் இயக்கம்
அடுத்து இறை நிலை அடைவதற்கான பாதையை
ஆயுத எழுத்தில் வைத்தார்கள்.
ஃ மூன்று புள்ளிகளாக நமக்கு காட்சி கொடுக்கும் இந்த ஆயுத எழுத்து
ஞான நிலையினையும் இறைவனை அடையும் வழியினையும் நமக்கு வழி காட்டுவதற்காக
ஏற்படுத்தப் பட்டது.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் ஒரு புள்ளி என்பது
இரண்டு புள்ளிகள் என்பது இரண்டு கண்களையும்
மூன்றாவதாக மேலே உள்ள புள்ளி நமது மூன்றாவது கண்
எனப்படுகின்ற நமது ஆன்மாவையும் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது நமது புருவ மத்தியம் என சொல்லப் படுகின்ற
உச்சிக்கு கீழே உண்ணாவுக்கு மேலே
நமது ஆன்மா நிலை கொண்டு உள்ளது அந்த ஆன்மாவினுள்ளே
இறைவன் குடி கொண்டுள்ளான் அதை தக்க ஆயுதம் கொண்டு
அறிந்து அம்மையம் ஆக வேண்டும் என்றுதான்
நடைமுறைக்கு பயன்படாத ஒரு ஒரு எழுத்தை படைத்தார்கள்.
அதே போல் தமிழில் உயிர் எழுத்துக்கு
அடிப்படை எழுத்துக்கள் அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்து மட்டுமே
இவை நம்மை இயக்கும் பஞ்ச பூதங்களை குறிக்கின்றது.
தமிழ் எழுத்தின் ஆதி மூலம் ஞானத்தின் பாதையை நமக்கு தெரிவிப்பதற்காக
அமைக்கப்பட்டது.
எழுத்து முதல் வார்த்தைகள் வரை தமிழ் மொழி சித்தர்களால் வளர்க்கப் பட்டது.
அப்படிப்பட்ட முன்னோடிகளான சித்தர்களின் இலக்கியங்கள் இருட்டடிப்பு
செய்யப்படுவது வேதனையான விஷயம்.
அன்புடன்
நக்கினம் சிவம்

No comments:

Post a Comment